ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
’முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன. இதில் எது ஜெயிக்கும்?’ என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.
முதல் மாணவன் எழுந்து, ’முயல்தான் ஜெயிக்கும். ஏனென்றால் முயல் ஆமையைவிட வேகமாக ஓடும்.’ என்று கூறினான்.
அடுத்த மாணவன் எழுந்து, ’இல்லை ஐயா! இறுதியில் ஆமையே ஜெயித்தது. ஓடி, ஒடி களைத்துப் போய் இறுதியில் ஒரு மரத்தடியில் படுத்து முயல் தூங்கி விட்டது. அப்போது ஆமை அதை கடந்து சென்று ஜெயித்து விட்டது’ என்றான்.
மூன்றாவது மாணவன் எழுந்து, ’ஐயா! இரண்டும் சேர்ந்தால் ஜெயிக்காது!’ என்று கூறினான்.
’அதெப்படி இரண்டும் ஜெயிக்காமல் போகும்?’ என்று ஆசிரியர் கேட்டார்.
மூன்றாவது மாணவன் சொன்னான், ’முயல் + ஆமை = முயலாமை. எனவே முயலாமை ஜெயிக்காது. முயற்சி செய்தால்தான் ஜெயிக்க முடியும்’ என்று.
ஆசிரியர் அந்த மாணவனைப் பாராட்டினார்.
நீதி:
‘முயற்சி செய்யுங்கள்! வெற்றி நிச்சயம்‘
’முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன. இதில் எது ஜெயிக்கும்?’ என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.
முதல் மாணவன் எழுந்து, ’முயல்தான் ஜெயிக்கும். ஏனென்றால் முயல் ஆமையைவிட வேகமாக ஓடும்.’ என்று கூறினான்.
அடுத்த மாணவன் எழுந்து, ’இல்லை ஐயா! இறுதியில் ஆமையே ஜெயித்தது. ஓடி, ஒடி களைத்துப் போய் இறுதியில் ஒரு மரத்தடியில் படுத்து முயல் தூங்கி விட்டது. அப்போது ஆமை அதை கடந்து சென்று ஜெயித்து விட்டது’ என்றான்.
மூன்றாவது மாணவன் எழுந்து, ’ஐயா! இரண்டும் சேர்ந்தால் ஜெயிக்காது!’ என்று கூறினான்.
’அதெப்படி இரண்டும் ஜெயிக்காமல் போகும்?’ என்று ஆசிரியர் கேட்டார்.
மூன்றாவது மாணவன் சொன்னான், ’முயல் + ஆமை = முயலாமை. எனவே முயலாமை ஜெயிக்காது. முயற்சி செய்தால்தான் ஜெயிக்க முடியும்’ என்று.
ஆசிரியர் அந்த மாணவனைப் பாராட்டினார்.
நீதி:
‘முயற்சி செய்யுங்கள்! வெற்றி நிச்சயம்‘
No comments:
Post a Comment