வகுப்பாசிரியர் குறிப்பிட்ட பாடத்தை நடத்தி முடித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து, ‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்‘ என்றார்.
யாரும் எதையும் கேட்கவில்லை. வகுப்பு முடிய இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அடுத்த பாடத்தை நடத்தாமல் அந்த பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கும்படி வலியுறுத்தினார். அதுதான் அவரது வழக்கமும்கூட. எப்போதுமே ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை மட்டுமே நடத்துவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் சேகருக்கு இது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தை நடத்துவதை வெறுத்தான்.
ஒரு நாள் அதை நேரடியாக அவரிடமே கேட்டும் விட்டான், ‘ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப நடத்துவதால் அது எளிதாக மனதில் பதியும் என்பது உண்மைதான் சார். ஆனால் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு உதாரணங்களுடன் நீங்கள் நடத்தும்போது அது மனதிற்கு இதமாகவும் இருக்கும் அல்லவா? அதோடு அடுத்த பாடத்தை நடத்தாமல் நேரத்தை வீணாக்கலாமா சார்?‘ என்று.
ஆசிரியர் சிறிது நேரம் அவனை அமைதியாக கூர்ந்து பார்த்தார். பிறகு, ‘நீ சாயங்காலம் என்னோட வீட்டுக்கு வா!‘ என்று சொல்லிவிட்டு, வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்.
சாயங்காலம் சேகர் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றான். ஆசிரியர் அவனை அவர் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். தோட்டத்தின் கோடிக்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த எட்டு கோழிகளும் தலைதெறிக்க ஓடின.
ஆசிரியர் சேகரைப் பார்த்து, ‘அந்த கோழிகளைப் பிடி. பிடி!‘ என்று கூவினார்.
சேகரும் அந்த கோழிகளை விரட்டிக்கொண்டு பின்னாடியே ஓடினான். சிதறி ஓடிய கோழிகள் நாலா திசையும் பறக்க, பரபரப்படைந்த சேகர், எதைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்துபோய் வந்தான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ‘சேகர்! அதோ அந்த கருப்புக் கோழியை முதலில் பிடித்து வா! பிறகு மற்றவற்றைப் பிடிக்கலாம்‘ என்று கூறினார்.
சேகர் இப்போது அந்த கருப்பு நிற கோழியை குறிவைத்து துரத்த, ஒரே நிமிடத்தில் அது ஓடி ஓடி களைப்படைந்து நிற்கவும் அதைப் பிடித்து விட்டான்.
ஆசிரியர் அவனிடம் வந்து, ‘பார்த்தாயா சேகர்! ஒன்றை மட்டும் குறி வைத்ததால் எளிதாக வென்று விட்டாய். அதே போல்தான் நானும் ஒரு பாடத்தை மட்டும் குறிவைத்து நடத்துகிறேன்.‘ என்று அவனுக்கு விளக்கினார். சேகரும் புரிந்ததாகத் தலையாட்டினான்.
நீதி:
‘வாழ்க்கையில் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.‘
யாரும் எதையும் கேட்கவில்லை. வகுப்பு முடிய இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அடுத்த பாடத்தை நடத்தாமல் அந்த பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கும்படி வலியுறுத்தினார். அதுதான் அவரது வழக்கமும்கூட. எப்போதுமே ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை மட்டுமே நடத்துவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் சேகருக்கு இது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தை நடத்துவதை வெறுத்தான்.
ஒரு நாள் அதை நேரடியாக அவரிடமே கேட்டும் விட்டான், ‘ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப நடத்துவதால் அது எளிதாக மனதில் பதியும் என்பது உண்மைதான் சார். ஆனால் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு உதாரணங்களுடன் நீங்கள் நடத்தும்போது அது மனதிற்கு இதமாகவும் இருக்கும் அல்லவா? அதோடு அடுத்த பாடத்தை நடத்தாமல் நேரத்தை வீணாக்கலாமா சார்?‘ என்று.
ஆசிரியர் சிறிது நேரம் அவனை அமைதியாக கூர்ந்து பார்த்தார். பிறகு, ‘நீ சாயங்காலம் என்னோட வீட்டுக்கு வா!‘ என்று சொல்லிவிட்டு, வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்.
சாயங்காலம் சேகர் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றான். ஆசிரியர் அவனை அவர் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். தோட்டத்தின் கோடிக்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த எட்டு கோழிகளும் தலைதெறிக்க ஓடின.
ஆசிரியர் சேகரைப் பார்த்து, ‘அந்த கோழிகளைப் பிடி. பிடி!‘ என்று கூவினார்.
சேகரும் அந்த கோழிகளை விரட்டிக்கொண்டு பின்னாடியே ஓடினான். சிதறி ஓடிய கோழிகள் நாலா திசையும் பறக்க, பரபரப்படைந்த சேகர், எதைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்துபோய் வந்தான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ‘சேகர்! அதோ அந்த கருப்புக் கோழியை முதலில் பிடித்து வா! பிறகு மற்றவற்றைப் பிடிக்கலாம்‘ என்று கூறினார்.
சேகர் இப்போது அந்த கருப்பு நிற கோழியை குறிவைத்து துரத்த, ஒரே நிமிடத்தில் அது ஓடி ஓடி களைப்படைந்து நிற்கவும் அதைப் பிடித்து விட்டான்.
ஆசிரியர் அவனிடம் வந்து, ‘பார்த்தாயா சேகர்! ஒன்றை மட்டும் குறி வைத்ததால் எளிதாக வென்று விட்டாய். அதே போல்தான் நானும் ஒரு பாடத்தை மட்டும் குறிவைத்து நடத்துகிறேன்.‘ என்று அவனுக்கு விளக்கினார். சேகரும் புரிந்ததாகத் தலையாட்டினான்.
நீதி:
‘வாழ்க்கையில் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.‘
No comments:
Post a Comment