ஒரு ஊருல பேராசைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளிடம் நிறைய சொத்து வேண்டும் என அடிக்கடி வேண்டினான்.
ஒரு நாள் கடவுள் அவன் முன்பு தோன்றி ஒரு குதிரையை கொடுத்தார்.
"இந்த குதிரை ஓடும் தூரம் உள்ள இடங்கள் எல்லாம் உனக்கு சொந்தமாகும்." என்றார்.
"அப்பாடா!" என்றால் குதிரை ஓடும். பஞ்ச வாகன குதிரையே! நில்" என்றால் நிற்கும்." என நிபந்தனை விதித்தார். அவனும் சம்மதித்தான்.
குதிரைமீது ஏறி, "அப்பாடா!" என்றான் குதிரை ஓட ஆரம்பித்தது.
காலை முதல் மறுநாள் வரை குதிரையில் ஓடி எல்லா இடங்களையும் சொந்த மாக்கினான் சொத்தின்மீது உள்ள பேராசையில் குதிரையை நிறுத்தும் வார்த்தையை மறந்துவிட்டான் .
பசியும் மயக்கமும் வந்தது குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்து. பிறகு ஒரு மலையின் மீது ஏற தொடங்கியது.
அவன் குதிரையை நிறுத்துவதற்காக பயத்தில் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியில் குதிரை மலையின் உச்சியை அடைந்தது .
அவன் கடைசியாக அந்தவார்த்தை ஞாபகத்திற்கு வர "பஞ்ச வாகன குதிரையே! நில்!" என்றான்.
குதிரையும் நின்றது.
சந்தோசம் தாங்க முடியாமல் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டான் .
குதிரை பாய்ந்ததே ஒரு பாய்ச்சல்......................!
என்னே கடவுளின் குசும்பு!
அந்த குதிரை போலதான் நமது மனம். ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒரு நாள் கடவுள் அவன் முன்பு தோன்றி ஒரு குதிரையை கொடுத்தார்.
"இந்த குதிரை ஓடும் தூரம் உள்ள இடங்கள் எல்லாம் உனக்கு சொந்தமாகும்." என்றார்.
"அப்பாடா!" என்றால் குதிரை ஓடும். பஞ்ச வாகன குதிரையே! நில்" என்றால் நிற்கும்." என நிபந்தனை விதித்தார். அவனும் சம்மதித்தான்.
குதிரைமீது ஏறி, "அப்பாடா!" என்றான் குதிரை ஓட ஆரம்பித்தது.
காலை முதல் மறுநாள் வரை குதிரையில் ஓடி எல்லா இடங்களையும் சொந்த மாக்கினான் சொத்தின்மீது உள்ள பேராசையில் குதிரையை நிறுத்தும் வார்த்தையை மறந்துவிட்டான் .
பசியும் மயக்கமும் வந்தது குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்து. பிறகு ஒரு மலையின் மீது ஏற தொடங்கியது.
அவன் குதிரையை நிறுத்துவதற்காக பயத்தில் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியில் குதிரை மலையின் உச்சியை அடைந்தது .
அவன் கடைசியாக அந்தவார்த்தை ஞாபகத்திற்கு வர "பஞ்ச வாகன குதிரையே! நில்!" என்றான்.
குதிரையும் நின்றது.
சந்தோசம் தாங்க முடியாமல் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டான் .
குதிரை பாய்ந்ததே ஒரு பாய்ச்சல்......................!
என்னே கடவுளின் குசும்பு!
அந்த குதிரை போலதான் நமது மனம். ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment