ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒருநாள் ஏதோ வேலையாக நடந்து சென்றார். அப்போது செருப்பு பிஞ்சு போச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்காரரை அழைத்து, "ஐயா! நடந்து வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப் போறேன். காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும்" என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து, "ஐயா! நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.
சில ஆண்டுகள் கடந்தன.
ஒரு நாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை.
பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று, "ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச் செல்ல முடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா?" என்று கேட்டனர்.
அந்த வீட்டுக்காரர் சொன்னார்,
"ஏண்டா! யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க”
உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை.
No comments:
Post a Comment