Sunday, 24 April 2016

அம்மா

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்டான், "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி?" என்று.

அப்போது அந்த மகன் சொன்னான், "என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவளாய் இல்லை." என்று.

இதைகேட்ட தகப்பன் கேட்டான், "அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?"

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான், "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று. ஆனால் கொஞ்ச நேரம் போனதும் என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி , நிலாவைக்காட்டி கதை சொல்லி அவள் தரும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்."

"ஆனால், இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் 'உனக்கு சோறு தரமாட்டேன் என்று.' நிஜமாவே அம்மா சொன்ன வார்தையை நிறைவேற்றி விட்டாள்."

"ஆமாம் அப்பா! நான் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சுப்பா!"

No comments:

Post a Comment