tag:blogger.com,1999:blog-84955764037540812602023-11-16T07:43:00.481-08:00needhikathaikalANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-46904094793091181362016-08-18T04:10:00.000-07:002016-08-18T04:10:06.786-07:00"நீதி கதை" - இதுதான் வாழ்க்கையா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaokTy2N4irjef14snFo9RwmF4okraF6LS6jXM1j3vgkTrXyo_LYaHFHI_7JWmqu0IW2x3uqm38KDc5yvFClx902xYWUa9w5ko5mqRuKahL6Z3NaZYW1cCC5-R_Fz4i_TXki1CLQ352pxR/s1600/13912589_1247373011941628_3616183812191573539_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaokTy2N4irjef14snFo9RwmF4okraF6LS6jXM1j3vgkTrXyo_LYaHFHI_7JWmqu0IW2x3uqm38KDc5yvFClx902xYWUa9w5ko5mqRuKahL6Z3NaZYW1cCC5-R_Fz4i_TXki1CLQ352pxR/s320/13912589_1247373011941628_3616183812191573539_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"K"}" id="fbPhotoSnowliftCaption" tabindex="0"><span class="hasCaption">அது ஒரு சின்ன கிராமம்.<br /> சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.<br /> அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல் சத்தம் கேட்டது.<span class="text_exposed_show"><br /> <br /> ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறியது.<br /> <br /> "உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்" என மறுத்தான் சிறுவன்.<br /> <br /> ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விட்டது.<br /> <br /> முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை.<br /> <br />
"பாவி முதலையே! இது நியாயமா?" என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன
செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான்
வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.<br /> <br />
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும்
அல்லாமல், நன்றி கெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால்
ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.<br /> <br /> மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். "இதுதான் உலகமா?" என்று.<br /> <br />
அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள்
முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன.
அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.<br /> <br /> அங்கு மேய்ந்து கொண்டு
இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த
காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை
வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது
என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.<br /> <br /> ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.<br /> <br />
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை
பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.<br /> <br /> "சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?" என்று முதலை சொல்லவும், '’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’' என்கிறது முயல்.<br /> <br /> "காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான்" என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது. <br /> <br />
"உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை
வீழ்த்திவிடமுடியும் உன்னால்." என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,
இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.<br /> <br /> முயல் சிறுவனைப் பார்த்து "நிற்காதே! ஓடிவிடு." என்றது. <br /> <br /> சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது.<br /> <br /> வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. <br /> <br /> கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.<br /> <br /> தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.<br /> <br /> சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது.<br /> <br /> சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.<br /> <br /> உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.<br /> <br /> கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.<br /> <br /> உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.<br /> <br /> இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!<br /> <br /> முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!<br /> <br /> அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.<br /> <br />
வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர்
வருவதை)எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை</span></span></span></div>
</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-22565951221972935732016-08-18T04:07:00.002-07:002016-08-18T04:07:34.601-07:00பேராசைக்காரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn5maFkpKprq6x7z7AxaNEnD-9dLU1sEahRLswLX0lzunMQv8HWWcRcYnLtDQoQ9nPGZaiHqfyFtR5rfdwBzX6Q5xMpo9HqlRRz6VeeBCJp0fq4w27graqVuAepIJ232XMj-Z03KkfzoiT/s1600/13939618_1251265081552421_6880482682498685288_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn5maFkpKprq6x7z7AxaNEnD-9dLU1sEahRLswLX0lzunMQv8HWWcRcYnLtDQoQ9nPGZaiHqfyFtR5rfdwBzX6Q5xMpo9HqlRRz6VeeBCJp0fq4w27graqVuAepIJ232XMj-Z03KkfzoiT/s320/13939618_1251265081552421_6880482682498685288_n.jpg" width="232" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு ஊருல பேராசைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளிடம் நிறைய சொத்து வேண்டும் என அடிக்கடி வேண்டினான்.<br /><br /> ஒரு நாள் கடவுள் அவன் முன்பு தோன்றி ஒரு குதிரையை கொடுத்தார்.<br /><br /> "இந்த குதிரை ஓடும் தூரம் உள்ள இடங்கள் எல்லாம் உனக்கு சொந்தமாகும்." என்றார். <br /><br /> "அப்பாடா!" என்றால் குதிரை ஓடும். பஞ்ச வாகன குதிரையே! நில்" என்றால் நிற்கும்." என நிபந்தனை விதித்தார். அவனும் சம்மதித்தான்.<br /><br /> குதிரைமீது ஏறி, "அப்பாடா!" என்றான் குதிரை ஓட ஆரம்பித்தது.<br /><br /> காலை முதல் மறுநாள் வரை குதிரையில் ஓடி எல்லா இடங்களையும் சொந்த மாக்கினான் சொத்தின்மீது உள்ள பேராசையில் குதிரையை நிறுத்தும் வார்த்தையை மறந்துவிட்டான் .<br /><br /> பசியும் மயக்கமும் வந்தது குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்து. பிறகு ஒரு மலையின் மீது ஏற தொடங்கியது.<br /><br /> அவன் குதிரையை நிறுத்துவதற்காக பயத்தில் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியில் குதிரை மலையின் உச்சியை அடைந்தது .<br /><br /> அவன் கடைசியாக அந்தவார்த்தை ஞாபகத்திற்கு வர "பஞ்ச வாகன குதிரையே! நில்!" என்றான். <br /><br /> குதிரையும் நின்றது.<br /><br /> சந்தோசம் தாங்க முடியாமல் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டான் .<br /><br /> குதிரை பாய்ந்ததே ஒரு பாய்ச்சல்......................!<br /><br /> என்னே கடவுளின் குசும்பு!<br /><br /> அந்த குதிரை போலதான் நமது மனம். ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கும்.</div>
</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-58340180782107912382016-08-18T04:05:00.004-07:002016-08-18T04:05:56.003-07:00"கைக்கடிகாரம்”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbV67AyC3ot8HSVGuGeMVC81Nd63RlPasOMNhIbENaBfA1WRDEn-ANBbCOKrd0jmKJybjO0U_bAuP6ppyBwghOaovMZRuxuj59aacWySEMihTXskuGiYklGa18dGsc7ZEULPl67vX2fzx7/s1600/14045984_1253574951321434_1272613307361315352_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="305" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbV67AyC3ot8HSVGuGeMVC81Nd63RlPasOMNhIbENaBfA1WRDEn-ANBbCOKrd0jmKJybjO0U_bAuP6ppyBwghOaovMZRuxuj59aacWySEMihTXskuGiYklGa18dGsc7ZEULPl67vX2fzx7/s320/14045984_1253574951321434_1272613307361315352_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
படித்ததில் பிடித்த ஒரு குட்டிக்கதை:<br /><br /> "கைக்கடிகாரம்”<br /><br /> ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.<br /><br /><br /> நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.<br /><br /> சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். <br /><br /> சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.<br /><br /> ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான். <br /><br /> விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார்.<br /><br /> மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.<br /><br /> அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார்.<br /><br /> "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான்.<br /><br /> நீதி: அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.</div>
</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-69024089988606120042016-04-24T05:30:00.002-07:002016-04-24T05:30:14.343-07:00புத்திசாலியா...? திறமைசாலியா....?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.<br />
<br />
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.<br />
<br />
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது. ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.<br />
<br />
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது." என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.<br />
<br />
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.<br />
<br />
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.<br />
<br />
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.<br />
<br />
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.<br />
<br />
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.<br />
<br />
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.<br />
<br />
"கடுமையாக உழைப்பதைவிட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-20183494040773034522016-04-24T05:27:00.004-07:002016-04-24T05:27:53.006-07:00ஒரு நாயின் விலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருவர் டீக்கடையிலிருந்து வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார்.<br />
<br />
ஒரு சவப்பெட்டியை முதலில் எடுத்து செல்கிறார்கள்.<br />
<br />
அதைத் தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .<br />
<br />
அதற்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்.<br />
<br />
அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள் . இதை பார்த்த நம் மனிதருக்கு ஒரே ஆர்வம்...அடக்க முடியவில்லை .<br />
<br />
அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று, "என்னை மன்னிக்கவும் ...உங்களை தொந்தரவு செய்வதற்கு ...ஆனால் இந்த மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்கையில் பார்த்தது இல்லை. எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள்.,...இது யாருடைய இறுதி ஊர்வலம்?" என்று கேட்டார்.<br />
<br />
"முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது."<br />
<br />
"என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ?"<br />
<br />
"என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது"<br />
<br />
"இரண்டாவது சவப்பெட்டி ?"<br />
<br />
"என்னுடைய மாமியாருடையது !! அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது"<br />
<br />
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார் "இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா?"<br />
<br />
அதற்கு அவர் சொன்ன பதில் ....... "பின்னால் வரும் வரிசையில் போய் நில்லுங்கள் !!!!!!!!!"</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-34802106943179423692016-04-24T05:24:00.004-07:002016-04-24T05:24:59.202-07:00இதுதான்டா வியாபாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்.<br />
<br />
"ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.<br />
<br />
எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.<br />
<br />
''ஆறு பழங்கள் பத்து ரூபாய்!'' என்று கூவினான்.<br />
<br />
அவனுக்கு நல்ல விற்பனை!<br />
<br />
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ''ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'' என்று விற்க முயன்றார்.<br />
<br />
பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.<br />
<br />
அடுத்து, ''ஆறு பழங்கள் பத்து ரூபாய்'' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!<br />
<br />
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.<br />
<br />
முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.<br />
<br />
முதியவர் சிரித்தபடி, "போய்யா..போ.. அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-2417184525518400482016-04-24T05:22:00.003-07:002016-04-24T05:22:28.784-07:00பாவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் ரசித்த கதை.<br />
காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.<br />
<br />
அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார்.<br />
<br />
முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.<br />
<br />
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.<br />
<br />
மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.<br />
<br />
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார்.<br />
<br />
முக்காலமும் உணர்ந்த அவர், '‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!'’ என்று கூறி விட்டு போய்விட்டார்.<br />
<br />
மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.<br />
<br />
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான்.<br />
<br />
அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.<br />
<br />
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.<br />
<br />
இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.<br />
<br />
ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.<br />
<br />
அந்த கணவன், ‘'நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?'’ எனக் கேட்டான்.<br />
<br />
"அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’' என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.<br />
<br />
அதற்கு அவளது கணவன், '‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’' என்றான்.<br />
<br />
அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.<br />
<br />
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘'சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான். ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.<br />
<br />
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.<br />
<br />
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.<br />
<br />
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-48950441992641986092016-04-24T04:03:00.000-07:002016-04-24T04:03:00.499-07:00இலவசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான். அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது.<br />
<br />
இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது.. இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.<br />
<br />
யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான்.<br />
<br />
அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது.<br />
<br />
அப்போது திருடன் நாயிடம், ''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்'' என்று கேட்டான்..<br />
<br />
அதற்கு அந்த நாய் சொல்லியது, ''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன். எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று''..<br />
<br />
யோசிக்க வேண்டிய விஷயம்..</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-21986918678792319562016-04-24T02:27:00.002-07:002016-04-24T02:27:31.975-07:00என் கேள்விக்கென்ன பதில்? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.<br />
<br />
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.<br />
<br />
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான்.<br />
<br />
“நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்”<br />
<br />
பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.<br />
<br />
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார்.<br />
<br />
சிறிது நேரத்தில் “அப்பா…அப்பா… ” என்றான் பையன்.<br />
<br />
“என்னடா?” கோபத்துடன் கேட்டார்.<br />
<br />
“இந்தக் காட்டாறு எங்கே போகுது?”<br />
<br />
“நம்ம வீட்டுக்குத்தான்”<br />
<br />
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.<br />
<br />
மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.<br />
<br />
பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னு பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்.<br />
<br />
இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-3592978380507732682016-04-24T02:26:00.000-07:002016-04-24T02:26:13.666-07:00மறுபடியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டீச்சர்: "ஏண்டா லேட்?"<br />
பையன்: "வீட்ல பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: "என்ன பிரச்சனை?"<br />
பையன்: "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: " அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை."<br />
<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: " அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "முளைச்ச புல்லை.. மாடு<br />
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"<br />
.<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"<br />
<br />
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"<br />
<br />
பையன்: "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"<br />
<br />
டீச்சர்;- "மறுபடியுமா...???????"</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-60039070875686486082016-04-24T02:25:00.001-07:002016-04-24T02:25:06.218-07:00குறும்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு<br />
மகானிடம் சென்று கேட்டான்:<br />
<br />
"நான் திராட்சை சாப்பிடலாமா?''<br />
<br />
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''<br />
<br />
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''<br />
<br />
"ஓ.. பயன்படுத்தலாமே?''<br />
<br />
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்<br />
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''<br />
<br />
"அதிலென்ன சந்தேகம்?''<br />
<br />
"அப்படீன்னா இதுவெல்லாம்<br />
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது<br />
மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே?''<br />
<br />
மகான் யோசித்தார்.<br />
<br />
குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்,<br />
"இங்க பாருப்பா... உன் தலை மேலே<br />
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா<br />
உனக்குக் காயம் ஏற்படுமா?''<br />
<br />
"அதெப்படி ஏற்படும்?''<br />
<br />
"தண்ணீர் ஊற்றினால்?''<br />
<br />
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்<br />
ஏற்படும்?''<br />
<br />
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து<br />
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்<br />
போட்டால்?''<br />
<br />
"காயம் ஏற்படும்''<br />
<br />
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''<br />
என்றார் மகான்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-74189307915482878582016-04-24T02:23:00.003-07:002016-04-24T02:23:45.474-07:00கர்மவினை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன்.<br />
<br />
தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!<br />
<br />
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.<br />
<br />
அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!!<br />
<br />
மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!!<br />
<br />
சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.<br />
<br />
இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான்.<br />
<br />
சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??<br />
<br />
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான்.<br />
<br />
அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.<br />
<br />
அதே நேரம் நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர்.<br />
<br />
அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர்.<br />
<br />
அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை !<br />
<br />
அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!<br />
<br />
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.<br />
<br />
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-11926541362368615172016-04-24T02:22:00.002-07:002016-04-24T02:22:31.466-07:00ஆப்பிள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்.<br />
<br />
அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு.!." என்றாள்.<br />
<br />
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.<br />
<br />
அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்.<br />
<br />
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.<br />
<br />
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள், "அம்மா! இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க." என்றாள்.<br />
<br />
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.,.<br />
<br />
எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.,.<br />
அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம்.,.<br />
<br />
ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்...<br />
<br />
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து, அவரை அறியவும்...<br />
<br />
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்...<br />
<br />
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...<br />
<br />
மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-41094446418023881332016-04-24T02:21:00.001-07:002016-04-24T02:21:33.013-07:00குட்டி காதல் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்பான கணவன் மனைவி. அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது, தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.<br />
<br />
ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்.. மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.<br />
<br />
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து அழுதுகிட்டு இருக்காங்க.<br />
<br />
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத் திறக்குறாங்க, அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மாவைக் கூப்பிடுங்கன்னு சொல்கிறான்.<br />
<br />
எல்லாரும் என்ன விஷயம்னு கேட்குறாங்க.<br />
<br />
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை நான் பூ வாங்கி வராமல் என் மனைவி ஏமாந்துப் போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டுவானு சொல்லிப் பணம் குடுத்தார்னு சொல்றான்.<br />
<br />
அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக அழவே, அந்தப் பையன் உள்ளே போய் பார்க்குறான்,<br />
<br />
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான்.<br />
<br />
அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை சடலமாக கிடத்தி இருக்காங்க.<br />
<br />
இதில் தன் மனைவி ஏமாந்துப் போய்விடக் கூடாதுனு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா?<br />
<br />
இல்லை, தன் இயல்பான வாழ்க்கை மாறியதை உணரு முன்பே இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா?</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-19854299815219028062016-04-24T02:20:00.000-07:002016-04-24T02:20:08.807-07:00வீட்டுக்கு வழி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரவிக்கு அவன் மனைவி வளர்க்கும் நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது.<br />
<br />
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் .<br />
<br />
ஆச்சர்யம்..! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!<br />
<br />
கடுப்பான ரவி, அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த<br />
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான்.<br />
<br />
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!<br />
<br />
மூன்றாம் நாள்…<br />
<br />
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான்.<br />
<br />
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.<br />
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.<br />
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.<br />
<br />
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.<br />
<br />
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, "உன் நாய், வீட்டில் இருக்கா?" என்று கேட்டான்.<br />
<br />
"இருக்குதே..! ஏன் கேக்குறீங்க?" என்றாள் அவள்.<br />
<br />
"அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!<br />
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு."</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-45370869137402303532016-04-24T02:18:00.002-07:002016-04-24T02:18:19.018-07:00வியாபார தர்மம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,<br />
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா"<br />
<br />
(நெஞ்சைத் தொட்ட பதில்)<br />
<br />
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுக்கொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.<br />
<br />
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"<br />
<br />
" ஓரணாம்மா"<br />
<br />
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"<br />
<br />
"இல்லம்மா வராதும்மா".<br />
<br />
"அதெல்லாம் முடியாது. அரையணாதான்" என்று பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.<br />
<br />
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு,<br />
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்<br />
<br />
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.<br />
<br />
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.<br />
<br />
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க,<br />
<br />
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"<br />
<br />
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "<br />
<br />
”இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.<br />
<br />
எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன், "ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....?" என்றுகேட்க, அதற்கு அந்த தாய்,<br />
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா." என்று நெத்தியடியாகக் கூறினாள்.<br />
<br />
நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-64108813257275087322016-04-24T02:16:00.004-07:002016-04-24T02:16:56.892-07:00மோட்சம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.<br />
<br />
அப்போது பார்வதி கேட்டார், "ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள். ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே? அது ஏன் அப்படி நடக்கவில்லை?" என கேட்டார்.<br />
<br />
சிவன் சொன்னார், "அது ஏன் என்னும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.<br />
<br />
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல்." என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.<br />
<br />
உடனே பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.<br />
<br />
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.<br />
<br />
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.<br />
<br />
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான்.<br />
<br />
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும்? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.<br />
<br />
உடன் பார்வதி அன்னை, “அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “ என வினவினார்.<br />
<br />
அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா? அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன். நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா.” என்றான்.<br />
<br />
முதியவராகிய எம்பெருமான் சொன்னார், "குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “<br />
என சொல்லி அழைத்து சென்றார்.<br />
<br />
"நம்பியவர்களுக்கு நம்பி வேண்டிய அனைத்தும் கிடைக்கும்."</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-39475344525987849472016-04-24T02:14:00.001-07:002016-04-24T02:14:12.314-07:00செவி கொடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.<br />
<br />
வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.<br />
<br />
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலை பிரித்துக் கொண்டிருந்தார்கள்.<br />
<br />
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.<br />
<br />
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.<br />
<br />
அதைப் பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.<br />
<br />
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது. "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."<br />
<br />
கோழி விட்டேற்றியாகச் சொன்னது, "உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."<br />
<br />
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.<br />
<br />
வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, "நான் எலிப்பொறியையெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.<br />
<br />
மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.<br />
<br />
ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை. "எலிப்பொறியைப் பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.<br />
<br />
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.<br />
<br />
ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.<br />
<br />
எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.<br />
<br />
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.<br />
<br />
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.<br />
<br />
அருகில் இருந்த ஒரு மூதாட்டி, "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.<br />
<br />
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.<br />
<br />
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.<br />
<br />
உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.<br />
<br />
சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.<br />
<br />
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.<br />
<br />
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது டீட்டீ.<br />
<br />
பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.<br />
<br />
எலி தப்பித்து விட்டது.<br />
<br />
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-78565858014125173382016-04-24T02:11:00.005-07:002016-04-24T02:11:52.211-07:00வெளிச்சத்தின் தூரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு பிஸினஸில் ஏதோ பிரச்சினை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.<br />
<br />
அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். "அவரைச்சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்" என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.<br />
<br />
பணக்காரருக்கு பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத்துறவியை சந்திக்கச்சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை விளக்கிச்சொன்னார்.<br />
<br />
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச்சொன்னார்.<br />
அவருடைய பிரச்சினைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார். அவற்றை கேட்ட பணக்காரருக்கு சிரிப்பு வந்துவிட்டது.<br />
<br />
"ஐயா, நீங்க என்னை தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்சினைகள் ரொம்பப்பெரிசு. அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச்சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!"<br />
<br />
ஜென் துறவி கோபப்படவில்லை. "இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?" என்றார்.<br />
<br />
"ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?"<br />
<br />
"பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படி திரும்பிப்போவீங்க?"<br />
<br />
"அது ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை. நான் கார்'ல தான் வந்திருக்கேன்!"<br />
<br />
"உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?"<br />
<br />
"நிச்சயமாக. அதில் என்ன சந்தேகம்?"<br />
"எனக்கு தெரிஞ்சு எந்தக்கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வைச்சுகிட்டு ஏழெட்டு கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?"<br />
<br />
"என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்கு மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சா போதாதா? அதை வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூட போகலாமே!"<br />
<br />
"அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!" என்றார் ஜென் துறவி.<br />
எதையுமே சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க. அதைப்பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும். எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம் நண்பர்களே...!!!</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-88202071154053028602016-04-24T02:07:00.003-07:002016-04-24T02:07:58.840-07:00நான் ராஜா ஆகப் போறேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.<br />
அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.<br />
<br />
ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.<br />
<br />
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!<br />
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால்<br />
போதும்; வனவிலங்குகள்<br />
கொன்று தீர்த்துவிடும்.<br />
<br />
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற<br />
இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு<br />
ஒப்புக் கொண்டவன் மட்டுமே<br />
அரியணையில் அமரப் பொருத்தமானவன்.<br />
<br />
ஆக , மன்னனாக முடிசூட்டிக்<br />
கொண்டவனின் தலையெழுத்து,<br />
ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய<br />
மரணம்.<br />
<br />
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு<br />
ஆசைபடாமலிருந்ததால் அந்த<br />
அரியணை பெரும்பாலும்<br />
காலியாகவே இருந்தது.<br />
<br />
இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியும்<br />
சாகத்தானே போகிறோம். மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.<br />
<br />
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.<br />
<br />
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு<br />
ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று<br />
ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச்<br />
செல்ல வேண்டும். அவனை<br />
வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.<br />
மன்னன் வந்தான் , அவனுடைய<br />
சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.<br />
<br />
மக்கள் வாயைப் பிளந்தனர்."'இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான். அதற்கு இவ்வளவு<br />
அலங்காரமா?''<br />
<br />
தான் செல்லவிருந்த படகைப்<br />
பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,<br />
''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான்<br />
நின்றுகொண்டா செல்வது? சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!"<br />
<br />
கட்டளைகள் பறந்தன. காரியங்கள்<br />
நடந்தன! சற்று நேரத்தில்<br />
அலங்கரிக்கப்பட்ட அழகான படகு<br />
ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு<br />
மறுகரை நோக்கிப் பயணித்தது.<br />
<br />
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.<br />
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.<br />
<br />
அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச்<br />
செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக்<br />
களிப்பில் பொங்கி வழிகிறான்.<br />
<br />
படகோட்டி பொறுத்துக்கொள்ள<br />
முடியாமல் கேட்டான், "மன்னா!<br />
எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''<br />
<br />
''தெரியும். மறுகரைக்குச் செல்கிறேன்!''<br />
<br />
"'அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த<br />
நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''<br />
<br />
''தெரியும். நானும் திரும்ப இந்த<br />
நகரத்திற்கு வரப் போவதில்லை!"<br />
<br />
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு<br />
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது ?''<br />
<br />
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களை காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள்<br />
கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!<br />
<br />
"இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம்<br />
விவசாயிகள் சென்றார்கள். காட்டைத் திருத்தி உழுதார்கள். இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.<br />
<br />
"மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம்<br />
கட்டடக்கலை வல்லுநர்கள்,<br />
தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு , வாசல், அரண்மனை, அந்தப்புரம் , சாலைகள் எல்லாம் தயார்!<br />
<br />
"நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம்<br />
அரசு அதிகாரிகள் சென்றனர்.<br />
நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்."<br />
<br />
"இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை. என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!"<br />
<br />
"சாகப் போகவில்லையப்பா , வாழப்<br />
போகின்றேன்! அதுவும் மன்னனாக<br />
ஆளப்போகிறேன்!"<br />
<br />
"உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!" என்றான் மன்னன்.<br />
<br />
அதிசயித்துப் போனான் படகோட்டி.<br />
-----------------<br />
இப்போது சொல்லுங்கள். மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை ?<br />
<br />
பல காரணங்கள் இருந்தாலும்<br />
குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.<br />
<br />
ஒன்று: ஐந்து ஆண்டுகளுக்குப் பின்<br />
உயிர் வாழவேண்டும். அதுவும்<br />
மன்னனாகவே வாழவேண்டும் என்று<br />
முடிவு எடுத்தது.<br />
<br />
இரண்டு: அந்த முடிவினை<br />
அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!<br />
<br />
அந்த மன்னனுடைய வெற்றிக்கு<br />
மட்டுமல்ல; நாம் அனைவருமே<br />
வெற்றி பெறவேண்டுமென்றால்<br />
நமக்குத்தேவை ஒரு இலக்கு.<br />
இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக<br />
திட்டமிடுதலும், திட்டமிட்ட பின்<br />
வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!<br />
<br />
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுதான் உங்கள்<br />
எதிர்காலம்!</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-63823856703357117972016-04-24T01:58:00.002-07:002016-04-24T01:58:40.437-07:00கடவுள் யாரையும் கைவிடுவதில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நாள் நான் முடிவு செய்தேன்<br />
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…<br />
<br />
ஆம், எனது வேலை, எனது உறவுகள்,<br />
என் இறையாண்மை.. அனைத்தையும் விட்டுவிடுவது என்று துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.<br />
<br />
அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.<br />
<br />
“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”<br />
<br />
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…<br />
<br />
“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”<br />
<br />
“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.<br />
<br />
“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.<br />
அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது.<br />
<br />
அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.<br />
ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.<br />
<br />
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.<br />
<br />
“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.<br />
ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.<br />
<br />
அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.<br />
<br />
“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை. தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.<br />
<br />
பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.<br />
எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.<br />
<br />
மேலும் கடவுள் என்னிடம்,<br />
“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.<br />
<br />
மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.<br />
<br />
“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.<br />
<br />
இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”<br />
<br />
நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”<br />
<br />
“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.<br />
<br />
“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.<br />
<br />
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.<br />
<br />
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.<br />
<br />
“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.<br />
<br />
நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.<br />
<br />
ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.<br />
<br />
"கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை."<br />
படித்ததில் பிடித்தது....வாழ்க வளமுடன்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-79403612267558125242016-04-24T01:56:00.001-07:002016-04-24T01:56:20.185-07:00கோபத்தின் கதை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.<br />
<br />
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.<br />
<br />
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.<br />
<br />
முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.<br />
<br />
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், "மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது." என அவன் அப்பாவிடம் கூறினான்.<br />
<br />
"இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு." என்றார் அப்பா.<br />
<br />
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.<br />
<br />
உடனே அப்பா சொன்னார், "ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?"<br />
<br />
வெட்கப்பட்டு தலை குனிந்தான் மகன்.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-75597273261750226052016-04-24T01:55:00.000-07:002016-04-24T01:55:16.855-07:00தொந்தரவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு சின்ன பொண்ணு வீட்டுல அதிகமா அடம் பண்ணிகிட்டே இருந்துச்சி..அவங்க அப்பாவ பேப்பர் படிக்க கூட விடாம தொந்தரவு பண்ணிகிட்டே இருந்துச்சி....<br />
<br />
அப்பா என்ன பண்றதுன்னு யோசிச்சாரு.<br />
<br />
அப்புறம் பேப்பர் ல கடைசி பக்கத்துல World Map படம் இருந்துச்சி. அந்த பக்கத்த சின்ன சின்ன துண்டா கிழிச்சி பொண்ணுகிட்ட குடுத்தாரு.<br />
<br />
"இந்த World Map-ஐ சரியா வச்சி காட்டு பாக்கலாம்"-னு சொல்லிட்டாரு..<br />
<br />
ஒரு 5 நிமிஷத்துல அந்த குழந்தை சரியாய் அடுக்கி வச்சிடுச்சி...<br />
<br />
அப்பா ஆச்சர்யப்பட்டு, "எப்படிமா இவ்ளோ சீக்கிரம் முடிச்ச?-னு கேட்டாரு.<br />
<br />
அப்போ அந்த சின்ன பொண்ணு சொன்னுச்சாம், "அப்பா, நீங்க குடுத்த இந்த World Map பின்னாடி ஒரு மனுஷனோட முகம் இருந்துச்சி. நான் மனுஷன சரியாய் வச்சேன். உலகம் தானா சரியா மாறிடுச்சி"</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-51078082277895995122016-04-24T01:52:00.001-07:002016-04-24T01:52:10.287-07:00யார் பொறுப்பு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அந்த கோயிலுக்கு சற்று தள்ளி ஓரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் அவன்.<br />
<br />
கால் சற்று ஊனம். இறைவன் இப்படி படைத்து விட்டானே? இப்படி கையேந்தவிட்டிவிட்டுவிட்டானே? என்று இறைவன் மீதே கோபம்.<br />
<br />
ஒரு நாள் இறந்தும் போகிறான்.<br />
<br />
"கடவுள் எனக்கு துரோகம் செயதுவிட்டார்.<br />
கடைசிவரை பிச்சைக்காரனக இருந்து என்காலம் முடிந்துவிட்டது. என் விஷயத்தில் அவருக்கு கருனை இல்லை." என்று புலம்பினான் அவனை அழைத்து சென்ற எமதூதர்களிடம்.<br />
<br />
எமதூதர்கள், ''கீழே பார்.'' என்றார்கள்.<br />
<br />
இறந்த அவன் உடலை புதைப்பதற்கு, அவன் உட்கார்ந்த இடத்திலயே புதைத்து விடலாம் என முடிவு செய்து சிறிது தோண்டினார்கள்.<br />
<br />
சிறிது தோண்டியதும் வைரமும் வைடுரீயமும் கொண்ட புதையல் தென்பட்டது.<br />
<br />
''கடவுள் படைத்ததும் அவர் வேலை முடிந்துவிட்டது. பணக்காரனக ஆவதோ ஏழையாக இருப்பதோ அவர் அவர் செயலை பொறுத்தது. எத்தனையோ முறை நடக்கும் போது, அந்தஇடத்தில் சற்று வித்தியாசமான ஓசையை உணர்ந்திருக்கிறாய். ஆனால் தோண்டி பார்க்கவில்லை நீ. புதையல் மீதே உட்கார்ந்து பிச்சை எடுத்தவன் நீ. இதற்கு யார் பொறுப்பு?"</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8495576403754081260.post-53170362518953097202016-04-24T01:50:00.000-07:002016-04-24T01:50:36.676-07:00நிஜம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார்.<br />
<br />
"தம்பி ஆஸ்பத்திரி போகனும்"<br />
<br />
"நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்"<br />
<br />
"என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.<br />
<br />
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.<br />
<br />
அப் பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பது போல் வேக வேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.<br />
<br />
டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.<br />
<br />
இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.<br />
<br />
அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.<br />
<br />
சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.<br />
<br />
"தம்பி....! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்." என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.<br />
<br />
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார்.<br />
<br />
பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.<br />
<br />
ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.<br />
<br />
"ஹலோ முதியோர் இல்லமா?"<br />
<br />
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"<br />
<br />
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்..!! இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"<br />
<br />
முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .<br />
<br />
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்.... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.</div>
ANNANAGAR DAILYhttp://www.blogger.com/profile/11348486471512370280noreply@blogger.com0